Tamilnadu
6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு... டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு !
தமிழ்நாட்டில் 34,807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக சிறப்பு விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கி தியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு மானியத்தில் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 6-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைத்து கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!