Tamilnadu
200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம்! : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் மேயர் பிரியா, சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், சுற்றுலாத் துறைக்கு மற்ற துறைகள் அளிக்கும் பங்கு உள்ளிட்டவை குறித்து சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன.
அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலா மிகவும் முக்கியமான ஒன்று. கோயில்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொக்கிசங்களை பாதுகாப்பதில் இந்து அறநிலையத்துறை மட்டும் அல்லாது சுற்றுலாத்துறைக்கும் பெரும் பங்கு உண்டு. அந்தவகையில் இந்து சமய அறநிலைத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படும்.
சென்னையை அடுத்துள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள திருவிடந்தை திருகோவிலுக்கு சொந்தமான இடத்தில் 200 ஏக்கர் பரப்பளவிற்கு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் முயற்சியில் ஆன்மிக சுற்றுலா மையம் அமையவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!