Tamilnadu
வேளச்சேரி மழை வெள்ளத்துக்கு முற்றுப்புள்ளி : பயன்பாட்டுக்கு வந்த கிண்டி ரேஸ் கிளப் மைதான புதிய குளங்கள் !
கிண்டியில் 160 ஏக்கரில் அமைந்துள்ள ரேஸ் கிளப் மைதானம் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னரும் தொடர்ந்த நிலையில், ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு முறையாக வாடகை பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ரேஸ் கிளப் மைதானத்தை தமிழ்நாடு அரசு சமீபத்தில் கையப்படப்படுத்தியது. அதனைத் வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீா்நிலையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கலாம் என பசுமை தீா்ப்பாயம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சாா்பில் மீட்கப்பட்ட நிலத்தில் 4.24 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 4 குளங்கள் வெட்டும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த நிலையில், இதில் இரண்டு குளங்கள் முழுவதும் வெட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மீதமுள்ள 2 குளங்கள் வெட்டும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன்பாக அந்த பணிகளும் முடிக்கப்படும் என்றும், இதனால் மைதானத்தில் தேங்கும் மழைநீா் வெளியேற்றப்படாமல் குளங்களில் தேக்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 3 குளங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!