Tamilnadu
பா.ஜ.க நிர்வாகி வீட்டில் CBCID போலிஸார் திடீர் சோதனை : சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பா.ஜ.க OBC அணியின் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆவடி மாநகர காவல் துறையின் மத்திய குற்ற பிரிவு போலீசார் கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
2023 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டில் நில மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சோதனையின் ஒரு பகுதியாக பா.ஜ.க நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளனர்.
பல்வேறு ஆவணங்களை அப்போது மத்திய குற்ற பிரிவு போலீசார் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்தாண்டு வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பா.ஜ.க நிர்வாகி வீட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும் பணப்பட்டுவாடா ஏதேனும் நடைபெற்றதா? என்பதற்காக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!