Tamilnadu
தொடர் விடுமுறை முடிந்தது! : தமிழ்நாடு போக்குவரத்துத் துறையை பாராட்டிய பொதுமக்கள்!
தீபஒளித் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறையை அடுத்து, சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பெருவாரியான மக்கள் சென்றனர்.
அதற்கு வழிவகுத்துத் தரும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறையினாலும், கூடுதலாக சுமார் 1000 சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் சேவைக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும், தனியார் பேருந்துகளிலும் அரசு பேருந்துகளின் கட்டணத் தொகை அளவை நிர்ணயம் செய்து, மக்களின் நிதிச் சுமையை போக்கியது தமிழ்நாடு அரசு.
இதனால், போக்குவரத்திற்கு ஆகும் செலவு கணிசமாக குறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பேருந்து அதிகரிப்பால் மக்களுக்கான போக்குவரத்து சேவையும் இடரின்றி நடைபெற்றது.
இந்நிலையில், சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பிய மக்கள் அளித்த பேட்டியில், “தீபஒளித் திருநாள் விடுமுறைக்கு பிறகு சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்ப போக்குவரத்து கழகம் சிறப்பாக பேருந்துகள் ஏற்பாடுகள் செய்துள்ளது. விரைவாக பேருந்துகள் கிடைத்தன. போக்குவரத்து இடையூறுகள் இல்லாத வகையி, அரசின் முயற்சி சிறப்பாக அமைந்தது” என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!
-
தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு!
-
“சிகிச்சை அளிக்க மறுத்தால் நடவடிக்கை” : தனியார் மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!
-
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் : ரூ4.12 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் அசத்தல்!