Tamilnadu
விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம்! : ராமேசுவரம் சூறைக்காற்று எதிரொலி!
தமிழ்நாடு முழுக்க பருவமழை எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது. மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகப்படியான மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. அவ்வரிசையில், நேற்று ராமேசுவரம் துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீசிய பலத்த சூறைக்காற்றில் ஏராளமான விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளது.
மேலும் நங்கூரம் அருந்து விசைப்படகுகள் தரை தட்டியுள்ளது. இதனை மீனவர்கள் இரவோடு இரவாக மீட்டுள்ளனர். இதனையடுத்து, ஏராளமான விசைப்படகு மீனவர்களுக்கு 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ராமேசுவரம் தீவு பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது என்பதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!