Tamilnadu
தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு தீக்காய பிரிவு தயாராக உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
நாடு முழுவதும் தீபாவளி திருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கி தீபாவளியை கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தீக்காயம் தொடர்பாக மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறை மற்றும் மருத்துவத்துறையில் விழிப்புணர்வால் அதிக விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி தீக்காய சிகிச்சைக்காக 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய பிரிவில் தயாராக உள்ளது. பட்டாசு வெடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக உள்ளது. மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதும், அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு பெரிய அளவில் காரணம்.
கடந்த 24 மணி நேரத்தில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏழு பேர் தீக்காயை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு பேர் வீடு திரும்பியுள்ளனர். இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களும் விரைவில் வீடு திரும்ப இருக்கிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு 1,363 எண்ணிக்கையிலான 108 வாகனங்கள் என்று பணியில் இருக்கிறார்கள். 70 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!