Tamilnadu
“நவீனமயமாக திறக்கப்படும் அண்ணா புற்றுநோய் மையம்” : எங்கு? எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
திமுக மாநில மகளிர் அணி சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் சென்னை பெசன்ட் நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .
அப்போது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, “திருப்பத்தூர், ஈரோடு, இராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரியில் 9 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 117 பேருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புற்று போய் பரிசோதனை மூலம் 117 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் விரைவில் 38 மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இன்னும் ஓராண்டில் காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் மையம் நவீன மையத்தில் திறக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !