Tamilnadu
வன்முறையை ஏற்படுத்த முயலும் எச்.ராஜா : கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்!
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜாவை கைது செய்ய கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா, ராகுல் காந்தி அவர்களை ஆன்டி இண்டியன் என்றும் தேச துரோகி என்றும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வெறுப்பு அரசியலை கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் வன்முறையை தூண்ட பார்க்கிறார். எனவே எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!