Tamilnadu
வன்முறையை ஏற்படுத்த முயலும் எச்.ராஜா : கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்!
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜாவை கைது செய்ய கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா, ராகுல் காந்தி அவர்களை ஆன்டி இண்டியன் என்றும் தேச துரோகி என்றும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வெறுப்பு அரசியலை கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் வன்முறையை தூண்ட பார்க்கிறார். எனவே எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!