Tamilnadu
வன்முறையை ஏற்படுத்த முயலும் எச்.ராஜா : கைது செய்ய கோரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகார்!
தமிழ்நாடு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜாவை கைது செய்ய கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில்,”மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவராக இருக்கும் எச்.ராஜா, ராகுல் காந்தி அவர்களை ஆன்டி இண்டியன் என்றும் தேச துரோகி என்றும் பேசியுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வெறுப்பு அரசியலை கொண்டு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் வன்முறையை தூண்ட பார்க்கிறார். எனவே எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!