Tamilnadu
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாய்ந்த ஊழல் வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி !
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
மேலும் மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், அன்றைய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக எஸ்.பி.வேலுமணி டெண்டர் ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட 10 பொறியாளர்கள் என மொத்தம் 11 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கின் அடிப்படையில் விரைவில் விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!