Tamilnadu
தமிழ்நாடு முழுக்க 2,763 தேர்வு மையங்களில், நாளை TNPSC குரூப் 2 மற்றும் 2a தேர்வு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நாளை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை சுமார் 7,93,947 தகுதிபெற்றவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
சென்னையில் மட்டும் 251 தேர்வு மையங்களின் 3,759 தேர்வு அறைகளில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது. மொத்த தேர்வர்களில் 75,185 பேர் சென்னையில் தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். சலுகை நேரம் 9 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட குரூப்-2a பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
Also Read
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!