Tamilnadu
தமிழ்நாடு முழுக்க 2,763 தேர்வு மையங்களில், நாளை TNPSC குரூப் 2 மற்றும் 2a தேர்வு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2a பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நாளை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
இத்தேர்வினை சுமார் 7,93,947 தகுதிபெற்றவர்கள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களின் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
சென்னையில் மட்டும் 251 தேர்வு மையங்களின் 3,759 தேர்வு அறைகளில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது. மொத்த தேர்வர்களில் 75,185 பேர் சென்னையில் தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும். சலுகை நேரம் 9 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட குரூப்-2a பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!