Tamilnadu
ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணி! : தமிழ்நாடு அரசின் அடுத்த சாதனை!
தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில், சேலம் மாவட்டம் மேட்டூரில் ரூ. 5,947 கோடியில் நீரேற்று புனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான முதல் கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பாலமலை மற்றும் நவிப்பட்டி கிராமத்தில் ரூ. 5,947 கோடியில் கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனத்தின் நீரேற்று புனல் மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நிலைய கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பதை கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம் சமர்பித்த நிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 7 நாட்களில் முதற்கட்ட பணிகளை தொடங்கியது கிரீன்கோ எனர்ஜீஸ் நிறுவனம்.
இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களின் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.20,114 கோடி முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை (Closed loop pumped storage projects) நிறுவுவதற்காக, முதலமைச்சர் முன்னிலையில் கடந்த 21ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, 28ஆம் நாள் முதல் கட்ட பணி தொடங்கியது குற்றிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!