Tamilnadu
வீடில்லாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய தி.மு.க MLA : நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மூதாட்டியான இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டின் அருகே இருந்த கழிவறையில் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து விக்கிரவாண்டி தி.மு.க MLA அன்னியூர் சிவாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனே அவர் மூதாட்டி தங்குவதற்கு தற்காலிகமாக இரும்புத் தகட்டில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ள அன்னியூர் சிவா எம்.எல்.ஏவுக்கு மூதாட்டி மாரிமுத்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நல்ல திட்டங்களை கொண்டு வருவது மட்டுமல்லாது மக்கள் கஷ்டங்களை உடனே தீர்க்கும் அரசாகவும், திராவிட மாடல் அரசு இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.
Also Read
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !