Tamilnadu
வீடில்லாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய தி.மு.க MLA : நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. மூதாட்டியான இவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் குடிசை வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீட்டின் அருகே இருந்த கழிவறையில் வசித்து வந்துள்ளார்.
இது குறித்து விக்கிரவாண்டி தி.மு.க MLA அன்னியூர் சிவாவுக்கு தகவல் தெரியவந்துள்ளது. உடனே அவர் மூதாட்டி தங்குவதற்கு தற்காலிகமாக இரும்புத் தகட்டில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ள அன்னியூர் சிவா எம்.எல்.ஏவுக்கு மூதாட்டி மாரிமுத்து மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நல்ல திட்டங்களை கொண்டு வருவது மட்டுமல்லாது மக்கள் கஷ்டங்களை உடனே தீர்க்கும் அரசாகவும், திராவிட மாடல் அரசு இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.
Also Read
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!
-
ஆதிதிராவிடர் சொல் விவாதம் தேவை ; த.வெ.க அரசு அவசரப்படக்கூடாது : முரசொலியின் ஆலோசனை என்ன?