Tamilnadu
”இதெல்லாம் அன்புமணிக்கு தெரியாது” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
ராணிப்பேட்டை அக்ராவரம் கிராமத்தில் ’மக்களுடன் முதல்வர்’ முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. தி.மு.க ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் தி.மு.க தான்.
யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!