Tamilnadu
”இதெல்லாம் அன்புமணிக்கு தெரியாது” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
ராணிப்பேட்டை அக்ராவரம் கிராமத்தில் ’மக்களுடன் முதல்வர்’ முகாம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நீர்வளத்துறை பற்றி அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. தி.மு.க ஆட்சியில் தான் 48 அணைகள் கட்டியுள்ளோம். காவேரி பிரச்சனை தீர்த்ததும், முல்லை பெரியாறு அணை பிரச்சனை தீர்த்ததும் தி.மு.க தான்.
யார் வேண்டுமென்றாலும் அரசியல் கட்சி தொடங்கவும், அரசியல் செய்யவும் கொடி ஏற்றவும் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !