Tamilnadu
”தமிழ்நாட்டின் தீங்கு ஹெச்.ராஜா” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 150 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்," சென்னையில் தாழ்தள பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவடைந்த பிறகு மின்சார பேருந்துகளும் செயல்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறையில் பொது மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகரத்தில் கையடக்க கருவி மூலம் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும். கமெண்ட் அடிக்கும் ஹெச்.ராஜாவை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள்
எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதலமைச்சரானவர். அடிப்படை அரசியல் கூட எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. ஜெயலலித்தா அவர்களுக்குகூட விழா எடுக்காமல் இருந்தவர்தான் பழனிசாமி. முதலில் அவர் தனது முதுகை பார்க்கட்டும் பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!