Tamilnadu
”தமிழ்நாட்டின் தீங்கு ஹெச்.ராஜா” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
அரியலூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 150 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்," சென்னையில் தாழ்தள பேருந்துகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவடைந்த பிறகு மின்சார பேருந்துகளும் செயல்பாட்டிற்கு வரும். போக்குவரத்து துறையில் பொது மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சென்னை மாநகரத்தில் கையடக்க கருவி மூலம் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பிறகு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் அறிமுகப்படுத்தப்படும். கமெண்ட் அடிக்கும் ஹெச்.ராஜாவை மக்கள் ஒதுக்கிவிட்டார்கள்
எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தில் முதலமைச்சரானவர். அடிப்படை அரசியல் கூட எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. ஜெயலலித்தா அவர்களுக்குகூட விழா எடுக்காமல் இருந்தவர்தான் பழனிசாமி. முதலில் அவர் தனது முதுகை பார்க்கட்டும் பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!
-
மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
-
“2028 ஒலிம்பிக் கிரிக்கெட்.. 6 அணிகள்.. தகுதிச்சுற்று நடைமுறையை வெளியிட்ட ஐசிசி” - முழு விவரம்!
-
4 முறை சாம்பியனை வீட்டிற்கு அனுப்பிய குட்டி நாடு - ஜெர்மனியை வீழ்த்தி பராகுவே கொடுத்த மாஸ் வெற்றி!
-
“தூக்கில் தொங்கிய படி.. காதல் ஜோடி சடலங்கள் மீட்பு.. ஆணவக் கொ*லையா?” - மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம்!