Tamilnadu
ராமர் பாத வாகன ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு : இந்து மகா சபா கோரிக்கையை மறுத்த உயர்நீதிமன்றம் !
திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதை கொண்டாடும் வகையில், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள கருப்பராயன் திருக்கோவிலில், ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பாதங்களை ராமேஸ்வரம் வரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்கு பூஜை செய்த பின்பு, அயோத்திக்கு ரயில் மூலம் அயோத்திக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் தொடக்க நிகழ்வில் இந்து மகா சபா மாநில நிர்வாகிகள் பங்கேற்பதாக உள்ளதாகவும், ஆனால் தொடக்க விழா மற்றும் வாகன ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
எனவே இதன் தொடக்க விழாவிற்கும் வாகன ஊர்வலத்திற்கும் அனுமதி அளித்து உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்..இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உதயகுமார், மனுதாரர் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைத்தது தொடர்பான புகார் உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் கோவிலுக்கு செல்வதையோ தரிசனம் செய்வதையொ யாரும் தடை செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட கோவிலின் அனுமதி பெறவில்லை என்றும் நெடுஞ்சாலை துறை அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்தார். அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் எனவே இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்..
வழக்கை விசாரித்து நீதிபதி, தொடக்க நிகழ்வு மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். மேலும், மனுதாரர் தனிப்பட்ட முறையில் கோவிலுக்கு செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்ய முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!