Tamilnadu
பட்டியலின வாலிபர் மீது கொடூர தாக்குதல்... பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் !
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கேயம் - கோவை ரோட்டில் ஸ்ரீ அருள் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும், பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளராக உள்ள சதீஷ் குமார், என்பவரிடம் மாதத் தவணையில் பழைய இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளார்.
அதற்கு மாதம் ரூ.2,400 வீதம் கட்ட வேண்டும். ஆனால் இவர் கடந்த 4 மாத தவணையை கட்டாமல் இருந்துள்ளார். இதனால் பாஜக நிர்வாகி சதீஷ் குமார், சங்கரை இன்று தனது ஊழியர்கள் மூலம் வரவழைத்து அலுவலகத்தில் வைத்து ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான வாலிபர் சங்கர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சங்கர் தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி சதீஷ் குமாரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி அளித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார், காங்கேயம் பாஜக தெற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஸ்குமார் மீது 115 (2), 127 BNS, SC/ST வன்கொடுமை வழக்கில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக நிர்வாகியால் தாக்குதலுக்கு ஆளான சங்கர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்த படி தாக்குதல் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!