Tamilnadu
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சார நேரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த வேளையில், நெல்லையிலிருந்து தாம்பரம் தொடர்வண்டி நிலையம் கொண்டுவரப்பட்ட ரூ. 4 கோடியை, தாம்பரம் காவல்துறை பறிமுதல் செய்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தொடர்பிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நேற்றைய நாள் (15.7.24) தமிழ்நாடு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதனையடுத்து, இன்று (16.7.24) சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் காலை முதல் மாலை வரை தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணை சுமார் 7 மணிநேரங்கள் நடத்தப்பட்ட பின், நயினார் நாகேந்திரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து வெளிவந்தார்.
Also Read
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!