Tamilnadu
ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு : நயினார் நாகேந்திரனிடம் 7 மணிநேரங்களுக்கு மேல் நடந்த விசாரணை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பிரச்சார நேரத்தின் போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த வேளையில், நெல்லையிலிருந்து தாம்பரம் தொடர்வண்டி நிலையம் கொண்டுவரப்பட்ட ரூ. 4 கோடியை, தாம்பரம் காவல்துறை பறிமுதல் செய்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, அதில் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் தொடர்பிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நேற்றைய நாள் (15.7.24) தமிழ்நாடு பா.ஜ.க அமைப்புச் செயலாளர் கேசவ விநாயத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதனையடுத்து, இன்று (16.7.24) சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனிடம் காலை முதல் மாலை வரை தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணை சுமார் 7 மணிநேரங்கள் நடத்தப்பட்ட பின், நயினார் நாகேந்திரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து வெளிவந்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!