Tamilnadu
இனி 16 நாட்களில் சான்றிதழ் பெறலாம் : தமிழ்நாடு அரசின் அசத்தல் முடிவு குறித்த விவரம் என்ன ?
ஆன்லைன் வழியாக அரசின் சான்றிதழ்கள், பட்டா மாறுதல்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி 16 நாட்களுக்கு மேல் காத்திருக்க தேவையில்லை என்ற வகையில் அதற்கான நடைமுறையை விரைவுபடுத்தி, இதனை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தாலுகா வாரியாக துணை ஆட்சியர் நிலையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும், ஒவ்வொரு தாலுகாவுக்கும், ஓர் சிறப்பு அதிகாரி தலைமையிலான குழு, உரிய நேரத்தில் ஆன்லைன் வழியான விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
அதே நேரம் முறைகேடுகள், தாமதம் நிகழ்வதை தடுக்கும் வகையில், வெளி தாலுக்காவை சேர்ந்த அதிகாரிகளை பணியமர்த்தவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தாலுக்காவுக்கும் உரிய அதிகாரிகளை தேர்வு செய்து நியமிக்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அரசின் இ-சேவை மற்றும் பல்வேறு சேவைத்துறைகளின் கீழ் 26 வகையான சான்றுகள், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இனி 16 நாட்களில் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் வாரமும், உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு சான்று வழங்கப்படுவதை அரசின் வருவாய்த்துறை கண்காணிக்க உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!