Tamilnadu
”குரங்கு கையில் பூமாலை போல் ஆகிவிட்ட ஆளுநர் பதவி" : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார் என திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, " நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
கேரளா அரசு அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சரும் தடுப்பணை குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஒரிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களை போற்றுகிறார். பா.ஜ.க இரட்டை நிலைபாட்டுன் செயல்படுகிறது. ஆனால் தி.மு.க ஒரே நிலைபாட்டுடன்தான் இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!