Tamilnadu
”குரங்கு கையில் பூமாலை போல் ஆகிவிட்ட ஆளுநர் பதவி" : ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார் என திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, " நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
கேரளா அரசு அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சரும் தடுப்பணை குறித்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஒரிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழர்களை போற்றுகிறார். பா.ஜ.க இரட்டை நிலைபாட்டுன் செயல்படுகிறது. ஆனால் தி.மு.க ஒரே நிலைபாட்டுடன்தான் இருந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!