Tamilnadu
”பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது” : டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் 2024 மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அனைத்து கட்சிகளும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையானது மக்கள் பிரச்னைகளை குறிப்பிட்டு எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் இதனை ஜூம்லா அறிக்கை என்றும் எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருவதோடு, மக்களை மேலும் முட்டாளாக்கும் அறிக்கை என்றும் கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என தி.மு.க செய்தித் தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ் இளங்கோவன், "கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள எதையும் பா.ஜ.க. நிறைவேற்றவில்லை.ஒரே நாடு, ஒரே தேர்தல், நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கும் செயல். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற பா.ஜ.க.வின் கனவை, அவர்களின் தேர்தல் அறிக்கையே தகர்த்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"பும்ரா, ரஷித்கான் போன்ற பௌலர்கள் எல்லா அணிகளிலும் இல்லை" - Impact Player விதிமுறைக்கு கோலி எதிர்ப்பு !
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!