Tamilnadu
தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக பணப்பட்டுவாடா செய்த அதிமுக : இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தேனி மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவர் அலங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
கல்லணை கிராமத்தில் பிரச்சாரம் செய்து முடித்துக் கொண்டு நாராயணசாமி கிளம்பியவுடன் அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள், கூட்டம் கூடுவதற்காக அழைத்து வரப்பட்டவர்களுக்கு தலா ரூ.100 விதம் நேரடியாகப் பணப்பட்டுவாடா செய்தனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து பணப்பட்டுவாடா செய்தது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி நேரடியாக அ.தி.மு.கவினர் நேரடியாக பணப்பட்டுவாடா செய்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!