Tamilnadu
’அ.தி.மு.க ஓட்டுக்குப் பணம் கொடுங்கள்’ : கள்ளக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் பேச்சால் சர்ச்சை!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் தி.மு.க தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் குமரகுரு, "அ.தி.மு.கவுக்கு யார் ஓட்டுப் போடுவார்களோ அவர்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். மற்ற யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பூத் அமைந்துள்ள பகுதியில் மட்டும் வாக்கு சேகரியுங்கள். வெளியில் சென்று ஒன்றும் கிழிக்க வேண்டாம் என வேட்பாளர் குமரகுரு பேசியது அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஓட்டுக்குப் பணம் கொடுங்கள் என பேசிய அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Also Read
-
5 கி.மீ தூரம் நடைபயணம் : தமிழ் வெல்லும்' - கலைஞர் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !