Tamilnadu
’அ.தி.மு.க ஓட்டுக்குப் பணம் கொடுங்கள்’ : கள்ளக்குறிச்சி அ.தி.மு.க வேட்பாளர் பேச்சால் சர்ச்சை!
தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள். மேலும் தி.மு.க தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஆத்தூரில் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் குமரகுரு, "அ.தி.மு.கவுக்கு யார் ஓட்டுப் போடுவார்களோ அவர்களுக்கு மட்டும் பணம் கொடுங்கள். மற்ற யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்" என பேசியது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பூத் அமைந்துள்ள பகுதியில் மட்டும் வாக்கு சேகரியுங்கள். வெளியில் சென்று ஒன்றும் கிழிக்க வேண்டாம் என வேட்பாளர் குமரகுரு பேசியது அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஓட்டுக்குப் பணம் கொடுங்கள் என பேசிய அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!