Tamilnadu
காப்பீடு பணத்திற்காக தாயை கொன்ற மகன் : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலம் படேக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹிமான்சு. இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்த விளையாட்டிற்காக நண்பர்களிடம் 4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். ஆனால் அனைத்து பணத்தையும் இழந்துள்ளார்.
இதையடுத்து கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தைத் திருப்பி கேட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத இருந்த ஹிமான்சுக்கு மோசமான யோசனை தோன்றியது. சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் நகை திருடி அதில் கிடைத்த பணத்தைத் தனது பெற்றோருக்கு ரூ.50 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு வாங்கியுள்ளார் ஹிமான்சு.
இந்த பணத்தைப் பெறுவதற்காகப் பெற்ற தாயைக் கொலை செய்து யமுனை ஆற்றின் கரையில் உடலை வீசியுள்ளார். இந்த கொடூர சம்பவம் வெளியே வந்ததை அடுத்து ஹிமான்சுவை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !