Tamilnadu
'கடலை காப்போம்' : 20 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று சிறுவர்கள்!
சென்னையை சேர்ந்த தாரகை ஆராதனா (9), நிஷ்விக் (7), அஸ்வதன் (14) ஆகிய மூன்று சிறுவர்கள் சென்னை நீலாங்கரை கடற்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சலடித்து 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்ப்போம்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஸ்கூபா நீச்சல் பயிற்சியாளர் அருண் என்பவரின் மகள்தான் தாரகை ஆராதனா. இவர் தனது 7 வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி பல்வேறு கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம்' என கடலில் நீச்சலடித்து விழிப்புணர்வு ஏற்படுத்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவருடன் அஸ்வதன் மற்றும் நிஷ்விக் என்ற இரண்டு சிறுவர்களும் இணைந்து கொண்டனர்.
பின்னர் இவர்கள் மூன்று பேரும் இதற்காகத் தொடர்ச்சி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று சென்னை நீலாங்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை உள்ள 20 கிலோமீட்டர் கடற்கரை நீச்சல் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!