Tamilnadu
'கடலை காப்போம்' : 20 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று சிறுவர்கள்!
சென்னையை சேர்ந்த தாரகை ஆராதனா (9), நிஷ்விக் (7), அஸ்வதன் (14) ஆகிய மூன்று சிறுவர்கள் சென்னை நீலாங்கரை கடற்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சலடித்து 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்ப்போம்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஸ்கூபா நீச்சல் பயிற்சியாளர் அருண் என்பவரின் மகள்தான் தாரகை ஆராதனா. இவர் தனது 7 வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி பல்வேறு கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம்' என கடலில் நீச்சலடித்து விழிப்புணர்வு ஏற்படுத்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவருடன் அஸ்வதன் மற்றும் நிஷ்விக் என்ற இரண்டு சிறுவர்களும் இணைந்து கொண்டனர்.
பின்னர் இவர்கள் மூன்று பேரும் இதற்காகத் தொடர்ச்சி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று சென்னை நீலாங்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை உள்ள 20 கிலோமீட்டர் கடற்கரை நீச்சல் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
Also Read
-
ரேபரேலி தொகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு : ராகுல் காந்தி போட்டியிடுவது தான் காரணமா?
-
8 முறை வாக்களித்த பா.ஜ.க பிரமுகர் மகன் ராஜன் சிங் கைது!
-
India Skills போட்டி... 40 பதக்கங்களை குவிந்த மாணவர்கள்: நான் முதல்வன் திட்டத்தால் மகுடம் சூடிய தமிழ்நாடு
-
நாட்டின் பிரதமரா அல்லது மெட்ரோ திட்டத்தின் சேர்மனா? : விடியல் பயணத்தை முடக்கும் மோடிக்கு முரசொலி கண்டனம்!
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ