Tamilnadu
'கடலை காப்போம்' : 20 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று சிறுவர்கள்!
சென்னையை சேர்ந்த தாரகை ஆராதனா (9), நிஷ்விக் (7), அஸ்வதன் (14) ஆகிய மூன்று சிறுவர்கள் சென்னை நீலாங்கரை கடற்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சலடித்து 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்ப்போம்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
ஸ்கூபா நீச்சல் பயிற்சியாளர் அருண் என்பவரின் மகள்தான் தாரகை ஆராதனா. இவர் தனது 7 வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி பல்வேறு கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம்' என கடலில் நீச்சலடித்து விழிப்புணர்வு ஏற்படுத்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவருடன் அஸ்வதன் மற்றும் நிஷ்விக் என்ற இரண்டு சிறுவர்களும் இணைந்து கொண்டனர்.
பின்னர் இவர்கள் மூன்று பேரும் இதற்காகத் தொடர்ச்சி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று சென்னை நீலாங்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை உள்ள 20 கிலோமீட்டர் கடற்கரை நீச்சல் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
Also Read
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்
-
“எவ்வளவு தைரியம் இருந்தா இங்க கொண்டாடுவீங்க..” -கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுத்து இந்துத்வ கும்பல் அடாவடி
-
“அணுசக்தி என்பது வணிகப் பொருள் அல்ல!” : ஒன்றிய அரசின் ‘சாந்தி’ மசோதாவைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!