Tamilnadu
பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசை எடுத்து வந்த இந்துக்கள் : மத நல்லிணக்க மாநிலம் தமிழ்நாடு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் நேற்று திறக்கப்பட்டது. இவ்விழாவை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அக்கிராமத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதோடு இந்த விழாவை வரவேற்று ஊர் முழுவதும் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை பாக்கு ஆகியவற்றைச் சீர்வரிசையாகப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர்.
அதேபோல் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளியுடன் பழங்களைச் சீர்வரிசையாகக் கொண்டுச் சென்றனர். சீர் வரிசை கொண்டு வந்த அப்போது பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில் இரு மதத்தினரையும் வரவேற்றார். அப்போது அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆரதழுவி அனைவரையும் வரவேற்றனர். பிறகு அனைவரும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இன்று பாமர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி இருக்கும் நிலையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை எடுத்து வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு மத நல்லிணக்க மாநிலமாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
Also Read
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news