Tamilnadu
பள்ளிவாசல் திறப்பு விழா - சீர்வரிசை எடுத்து வந்த இந்துக்கள் : மத நல்லிணக்க மாநிலம் தமிழ்நாடு!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாசல் நேற்று திறக்கப்பட்டது. இவ்விழாவை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அக்கிராமத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் இணைந்து கொண்டாடியுள்ளனர்.
இதோடு இந்த விழாவை வரவேற்று ஊர் முழுவதும் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் பேனர்கள் வைத்துள்ளனர். மேலும் இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை பாக்கு ஆகியவற்றைச் சீர்வரிசையாகப் பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர்.
அதேபோல் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளியுடன் பழங்களைச் சீர்வரிசையாகக் கொண்டுச் சென்றனர். சீர் வரிசை கொண்டு வந்த அப்போது பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில் இரு மதத்தினரையும் வரவேற்றார். அப்போது அங்கிருந்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆரதழுவி அனைவரையும் வரவேற்றனர். பிறகு அனைவரும் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இன்று பாமர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்டி இருக்கும் நிலையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை எடுத்து வந்து இந்தியாவிற்கே தமிழ்நாடு மத நல்லிணக்க மாநிலமாக இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!