Tamilnadu
”உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு”.. கலாநிதி வீராசாமி MP பெருமிதம்!
சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் சார்பில் உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது. இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கலாநிதி வீராசாமி எம்.பி, " தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து வரப்படுகிறது.. அதிலும் இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெண்களுக்குப் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடுதான் திகழ்ந்து வருகிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புதான். தற்போது, உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நிச்சயம் முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் பலரும் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வருவார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மன்னிப்பு கேள் : எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எதிர்ப்பு!
-
வேளாண்மை – உழவர் நலத் துறை : 169 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எடப்பாடி பழனிசாமிக்கு ஆம்புலன்ஸ்-ஐ பார்த்தால் ஏதோ ஒன்று தெரிகிறது போல?” - அமைச்சர் மா.சு. கண்டனம்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் - யார் இந்த சுதர்சன் ரெட்டி?
-
ஊட்டச்சத்து குறைபாடு: 15 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் உயிர்பலி!