Tamilnadu
”அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்".. முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு!
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. பவள விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது,அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது, பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும் மூத்தமுன்னோடுகளுக்கு பொற்கிழிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த முப்பெரும் விழாவில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செலியை வெளியிட்டார்.
பின்னர் விருது பெற்றவர்கள் சார்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “எங்களை அடையாளம் கண்ட இயக்கம் தி.மு.கதான். எங்களின் பின்புலம் தி.மு.க மட்டுமே. கல்லூரி படிப்பை முடித்ததுமே முத்தமிழறிஞர் கலைஞர் மீது இருந்த பற்றால் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றேன். தளபதி மு.க.ஸ்டாலின் நடத்தும் பேரில் சிப்பாயாக முதல் வரிசையில் நானே இருப்பேன். என் உயிர் மூச்சு இருக்கும் வரை தி.மு.கழகத்திற்காக உழைப்பேன்”என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தி.மு.கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளை வீட்டிற்கு அனுப்பினோம். அதேபோல், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்" என தெரிவித்தார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!