Tamilnadu
”மக்களுடன் ஸ்டாலின்” : தி.மு.க முப்பெரும் விழாவில் செயலி வெளியீடு : அதன் 5 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ!
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா, தி.மு.க. பவள விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது,பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும் மூத்தமுன்னோடுகளுக்கு பொற்கிழிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த முப்பெரும் விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செலியை வெளியிட்டார்.
இந்த செயலியில், தி.மு.க அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தி.மு.க அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்து கொள்ளவும் முடியும்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!