Tamilnadu
”மக்களுடன் ஸ்டாலின்” : தி.மு.க முப்பெரும் விழாவில் செயலி வெளியீடு : அதன் 5 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ!
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா, தி.மு.க. பவள விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழா கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் நடைபெற்று வருகிறது.
இந்த முப்பெரும் விழாவில், மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்களுக்குப் பெரியார் விருது, மீஞ்சூர் க. சுந்தரம் அவர்களுக்கு அண்ணா விருது, அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்குக் கலைஞர் விருது, தென்காசி மலிகா கதிரவன் அவர்களுக்குப் பாவேந்தர் விருது,பெங்களூர் ந.இராமசாமி அவர்களுக்குப் பேராசிரியர் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.
மேலும் மூத்தமுன்னோடுகளுக்கு பொற்கிழிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த முப்பெரும் விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செலியை வெளியிட்டார்.
இந்த செயலியில், தி.மு.க அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் தி.மு.க அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்து கொள்ளவும் முடியும்.
Also Read
-
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபருக்கு ரூ.1 லட்சம் ஓய்வு ஊதியம் : பெரியார் பல்கலை. உத்தரவால் சர்ச்சை!
-
வட இந்தியர் vs தென் இந்தியர்: தோல்வி பயத்தில் மக்களிடையே பிரிவினையை விதைக்கும் மோடி... வலுக்கும் கண்டனம்!
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?