Tamilnadu

9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

சென்னை அடுத்து மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "தனது 9 வயது மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாகச் சோர்வாக இருந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, பள்ளிக்குத் தினமும் வேனில் அழைத்துச் செல்லும் ஓட்டுநர் மாமா 'பேட் டச்' செய்ததாகக் கூறியதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.

அதைத் தொடர்ந்து வேன் ஓட்டுநரை நாங்கள் மறைமுகமாகக் கண்காணித்தபோது சிறுமிகளிடம் அவர் பாலியல் சீண்டல் செய்தது உறுதியானது. எங்களிடம் வீடியோ ஆதாரமும் உள்ளது." என தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து பள்ளி வேன் ஓட்டுநரான ரமேஷை போலிஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பா.ஜ.கவின் அம்பத்தூர் 90வது வார்டு தலைவராக இருப்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. பள்ளி சிறுமிகளுக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொந்தரவு செய்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உயிர் பலி வாங்கும் நீட்: மேலும் ஒரு மாணவி விபரீத முடிவு.. ஒரே ஆண்டில் ஒரே பகுதியில் 25 மாணவர்கள் தற்கொலை