Tamilnadu
9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. பா.ஜ.க நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
சென்னை அடுத்து மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், "தனது 9 வயது மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாகச் சோர்வாக இருந்தார். இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, பள்ளிக்குத் தினமும் வேனில் அழைத்துச் செல்லும் ஓட்டுநர் மாமா 'பேட் டச்' செய்ததாகக் கூறியதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்.
அதைத் தொடர்ந்து வேன் ஓட்டுநரை நாங்கள் மறைமுகமாகக் கண்காணித்தபோது சிறுமிகளிடம் அவர் பாலியல் சீண்டல் செய்தது உறுதியானது. எங்களிடம் வீடியோ ஆதாரமும் உள்ளது." என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து பள்ளி வேன் ஓட்டுநரான ரமேஷை போலிஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பா.ஜ.கவின் அம்பத்தூர் 90வது வார்டு தலைவராக இருப்பதும் போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. பள்ளி சிறுமிகளுக்கு பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொந்தரவு செய்தது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!
-
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
-
“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
-
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6% அசுர வளர்ச்சி! : முழு விவரம் உள்ளே!