Tamilnadu
ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. சிக்கிய சசிகலா மற்றும் இளவரசி!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதற்காக அங்குள்ள அதிகாரிகளுக்கு ரூ. 2 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சசிகலா மற்றும் இளவரசி உட்பட சிறைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு பெங்களூரில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இதே போல ஏற்கனவே இந்த வழக்கில் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Also Read
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!