Tamilnadu
வேலூரில் திமுக முப்பெரும் விழா.. பெரியார் அண்ணா கலைஞர் விருதுகள் அறிவிப்பு - யார் யாருக்கு என்ன விருது?
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழனத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழா நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம் தேதி வேலூரில் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர்களின் பெயர்களை தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன்
அண்ணா விருது - மீஞ்சூர் க. சுந்தரம்
கலைஞர் விருது - அமைச்சர் ஐ. பெரியசாமி
பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவன்
பேராசிரியர் விருது - பெங்களூர் ந.இராமசாமி
ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Also Read
-
மோடியின் கபட நாடகத்தை மறக்க வேண்டாம் : நடிகர் பிரகாஷ் ராஜ்!
-
வெளிப்படையாக நடக்கும் விதிமீறல்கள் : அடங்க மறுக்கும் பா.ஜ.க!
-
4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!
-
“இந்த ஆண்டோடு PSG அணியிலிருந்து வெளியேறுகிறேன்” - நட்சத்திர வீரர் எம்பாப்பே அறிவிப்பு !
-
மேம்பால சுவரில் மோதிய பைக் : தூக்கி வீசப்பட்ட இருவர் - திக் திக் வீடியோ!