Tamilnadu
வேலூரில் திமுக முப்பெரும் விழா.. பெரியார் அண்ணா கலைஞர் விருதுகள் அறிவிப்பு - யார் யாருக்கு என்ன விருது?
திராவிட இயக்கத்தின் வழித் தோன்றல் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17, தி.மு.கழகத்தை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்டம்பர் 15. தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 17. இம்மூன்றையும் ஒன்றிணைத்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் ஒவ்வொரு ஆண்டும் “முப்பெரும் விழா”வாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழனத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவுடன் சேர்த்து முப்பெரும் விழா நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம் தேதி வேலூரில் தி.மு.க முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் பெறுவோர்களின் பெயர்களை தி.மு.க தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன்
அண்ணா விருது - மீஞ்சூர் க. சுந்தரம்
கலைஞர் விருது - அமைச்சர் ஐ. பெரியசாமி
பாவேந்தர் விருது - தென்காசி மலிகா கதிரவன்
பேராசிரியர் விருது - பெங்களூர் ந.இராமசாமி
ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!