Tamilnadu
பெற்றோர்களே உஷார்.. வேடிக்கை பார்க்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப பலி!
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ். இவர் டீக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு நிதிஷ் என்ற 4 வயதில் சிறுவன் இருந்தான்.
இந்நிலையில் சிறுவன் நிதிஷ் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்ப்பதற்காக பால்கனியின் கம்பி மீது ஏறி எட்டிப்பார்த்துள்ளான்.
அப்போது நிலை தடுமாறி சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதில் பலத்த காயம் அடைந்த நித்திஷ் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடிக்கை பார்க்கும் போது மாடியிலிருந்து தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!
-
புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட CM MK Stalin: மிகை ஊதியம்,பொங்கல் பரிசு!
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!