Tamilnadu
பணம் வராததால் ஆத்திரம்.. ATM எந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கிய நபர்!
வேலூர் மாவட்டம், ஊசூர் பகுதியில் இண்டி கேஸ் ATM உள்ளது. இந்த ஏடிஎம்மிற்கு இதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஏந்திரத்திலிருந்து பணம் வரவில்லை.
மேலும் பலமுறை முயற்சி செய்து பார்த்துள்ளார். இருந்தும் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிலிருந்து கோடாரியை எடுத்து ATM ஆம் மையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் ATM ஏந்திரத்தைக் கோடாரியால் அடித்து நொறுக்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு உடனே வந்த போலிஸார் கந்தசாமியை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணம் வராததால் ஏடிஎம் ஏந்திரத்தை அடித்து நொறுக்கியதாகக் கூறினார். மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!