Tamilnadu
அதிமுக ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மற்றுமொரு அவலம்.. சிறு மழைக்கே இடிந்து விழுந்த மைதான கேலரி !
கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டுள்ள நிலையில், சில பணிகள் நடந்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தை அழகுபடுத்தும் நோக்கில் புதிய இருக்கைகள் கேலரிகள் மேற் கூரைகள் அமைக்கப்பட்டது. 14 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவும் நடத்தப்பட்டு தற்போது அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் பாளையங்கோட்டை பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் காற்று பலமாக வீசியதால் அதனைத் தாக்கு பிடிக்காமல் வ.உ.சி மைதானத்தின் இரண்டு கேலரிகளின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தது.
மதிய நேரம் என்பதால் யாரும் மைதானத்திற்குள் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உடனடியாக சேதம் அடைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படும் புதிய மேற்கூரை அமைக்கப்படும் என்றும் உறுதி கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே இருக்கக்கூடிய மேற்கூரைகள் உறுதித் தன்மை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதுவரை பொதுமக்கள் மைதானத்திற்கு வர நுழைய தடை விதிக்கப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!