Tamilnadu
"இஸ்லாமிய மக்களுக்கு என்றும் தி.மு.க துணை நிற்கும்".. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்தில், தி.மு.க மாநில சிறுபான்மை நல உரிமைப்பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, இஃப்தார் நோன்பினை திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களுக்கும் காவலராக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அ.தி.மு.க ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட மிலாடி நபி விடுமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் வழிவந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சிறுபான்மையினருக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.
அந்த வகையில் சிறுபான்மையினர் ஆணையத்தை அமைத்து, சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் கட்ட பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த நிதிநிலை பெற்றுத் தந்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு என்றும் தி.மு.க துணை நிற்கும்.
கூட்டணி வேறு கொள்கை வேறு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூறுகிறார். ஆனால் இங்குக் கூடியிருக்கும் கூட்டத்திற்குக் கூட்டணியும் ஒன்றுதான் கொள்கையும் ஒன்று தான்.
மேலும் தேர்தல் வாக்குறுதிகளான வகுப்பு வாரிய சொத்துகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி வாசல், தர்காக்கள் உள்ளிட்ட வகுப்பு வாரிய சொத்துக்களைப் பழுது பார்க்க நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.மு நாசர், செஞ்சி மஸ்தான் , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!