Tamilnadu
ஆபாசப் படம் எடுத்து வெளியிடுவேன்.. மனைவியை மிரட்டிய கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி!
திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில், கடந்த 19. 03. 2018ம் தேதி பெண் ஒருவர் தன்னை ஆபாசமாகப் படம் பிடித்து 'சமூக ஊட்டங்களில் வெளியிடப்போவதாகப் கணவர் மிரட்டுவதாகப் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணையை முடிந்து, கரூரைச் சேர்ந்த தேவ் ஆனந்த் என்பவரை போலிஸார் கைது செய்தனர். பின்னர் கடந்த 20.09.2018-ந்தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி பாலாஜி தீர்ப்பு வழங்கினார்.
அதில் தேவ் ஆனந்த் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,20,000/- அபராதம் விதித்து ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,20,000 இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என நீதிபதி பாலாஜி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?