Tamilnadu
மாமியாரிடம் பாலியல் அத்துமீறல்.. கணவன் மீது மிளகாய்ப்பொடி கலந்த சுடுதண்ணீர் ஊற்றிய மனைவி!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வராஜ். இவரது மனைவி டயானா மேரி. அவரின் தாய் இன்னாசியம்மாள் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் குடித்து விட்டு மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை மனைவியும், அவரது தந்தையும் பல முறை கண்டித்து அவர் தொடர்ந்து இப்படியே நடந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த 5ம் தேதி மாமியாரிடம் அத்துமீறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமியார் மற்றும் மனைவி இருவரும் சுடுதண்ணீரில் மிளகாய்ப் பொடியைக் கலந்து அந்த நீரை செல்வராஜ் உடல் மீது ஊற்றியுள்ளது.
பின்னர் உடல் வெந்த நிலையில் செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை திருத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் மனைவி மேரி மற்றும் மாமியார் இன்னாசி அம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கணவனை மனைவி சுடுதண்ணீர் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!