Tamilnadu
“இதனால்தான் அரசியலில் இருந்து விலகினேன்” : மனம் திறந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!
சென்னை இராயப்பேட்டை மியுசிக் அகாடமியில் சேபியன்ஸ் ஹெல்த் ஃபவுண்டேஷனின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிறுநீரகம் பாதிப்பு எனக்கு 60% இருந்த நிலையில், நான் ரவிசந்திரன் அவர்களிடம் மருத்துவம் பார்த்தேன். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் நல்லபடியாக இருக்கிறேன் என்றால் அவை மருத்துவர் ரவிசந்திரனால் தான். அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கும் போது, கொரோனா 2வது கொரோனா அலை வந்துவிட்டது.
அப்போது மருத்துவர்கள் நீங்கள் பிரசாரம் செல்லகூடாது. அப்படி சென்றாலும் 10 அடி வரை தள்ளி நிற்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தனர். இதனால் தான் அரசியலில் இருந்து விலகினேன்.
மது குடித்தால், புகைப்பிடித்தால் குறிப்பிட்ட உடல் உறுப்புகள் தான் பாதிக்கும். உப்பு அதிகமானல் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் பாதிக்கும். எண்ணம் நன்றாக இருந்தால் மனசு நன்றாக இருக்கும். மனசு நன்றாக இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, “ நானே தொலைபேசியில் அழைத்து அரசியலுக்கு வர வேண்டாம் என கூறினேன். அரசியல் ஆரோக்கியமற்றது, அரசியலுக்கு வந்தால் உடல்நலத்தோடு இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் அது இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!