Tamilnadu
திடீரென பற்றி எரிந்த கார்.. கதவு திறக்க முடியாமல் சிக்கிய தம்பதி: நூலிழையில் உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கனாதன் தெருவில் பாலமுருகன் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது மனைவி அனுஷா இருந்துள்ளார்.
இதையடுத்து கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த பாலமுருகன் உடனே காரை நிறுத்தியுள்ளார்.
ஆனால் கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. பிறகு உடனே பாலமுருகன் காரில் இருந்து வெளியேவந்துள்ளார். ஆனால் அவரது மனைவி அனுஷா காரின் கதவை திறக்க முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளார். பிறகு அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காரின் கதவை திறந்து அனுஷாவை காப்பாற்றியுள்ளது. இதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இதுபற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் உதவியுடன் பொதுமக்கள் காரில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். இருப்பினும் காரின் முன்பக்கம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
மேலும் காயமடைந்த அனுஷாவை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடிரென தீபற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்
-
“நிர்வாகிகளின் உணர்வு என்ன? உண்மை என்ன? அது மட்டும்தான் எனக்குத் தேவை!” : மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
“காதலிக்கு பரிசு கொடுக்க ஆடுகளை திருடிய த.வெ.க பிரமுகர்” : வழக்குப் பதிவு செய்தாத காவல்துறை!
-
அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் த.வெ.க அமைச்சர் : ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார்!