Tamilnadu
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சாலையில் பற்றி எரிந்த கார்: தாம்பரத்தில் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே உள்ள சிக்னலில் சினிமா ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
அப்போது, பின்னால் வந்த இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்ததால் உயிர் தப்பினர். ஒன்றின் மீது ஒன்று மோதி கொண்டதில் ஒரு கார் திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது இதில் காரில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
மேலும் அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியை கொண்டு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதேபோல் கார்களில் பயணித்தவர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் தாம்பரம், பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!