Tamilnadu
அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.. சாலையில் பற்றி எரிந்த கார்: தாம்பரத்தில் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே உள்ள சிக்னலில் சினிமா ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
அப்போது, பின்னால் வந்த இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்ததால் உயிர் தப்பினர். ஒன்றின் மீது ஒன்று மோதி கொண்டதில் ஒரு கார் திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது இதில் காரில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.
மேலும் அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியை கொண்டு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதேபோல் கார்களில் பயணித்தவர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் தாம்பரம், பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!