Tamilnadu
பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய காவலர்கள்: வியந்து பார்த்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சரியாக 12 மணிக்குப் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி காவல்துறையினர் கொண்டாடினர். பிறகு பொதுமக்களுக்கு கேக் வழங்கி காவல் கண்காணிப்பாளர் சுதாகர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பொதுமக்களுடன் இணைந்து போலிஸார் புத்தாண்டு கொண்டாடியதைப் பார்த்த பெல்ஜியம் நாட்டை சார்ந்த பெண்மணி வியந்துபார்த்து, "இது போன்று நிகழ்வு நான் பார்த்ததில்லை. இது புதிதாக இருக்கிறது நன்றாகவும் இருக்கிறது" என போலிஸாரை பாராட்டினார்.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!