Tamilnadu
பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய காவலர்கள்: வியந்து பார்த்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சரியாக 12 மணிக்குப் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி காவல்துறையினர் கொண்டாடினர். பிறகு பொதுமக்களுக்கு கேக் வழங்கி காவல் கண்காணிப்பாளர் சுதாகர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பொதுமக்களுடன் இணைந்து போலிஸார் புத்தாண்டு கொண்டாடியதைப் பார்த்த பெல்ஜியம் நாட்டை சார்ந்த பெண்மணி வியந்துபார்த்து, "இது போன்று நிகழ்வு நான் பார்த்ததில்லை. இது புதிதாக இருக்கிறது நன்றாகவும் இருக்கிறது" என போலிஸாரை பாராட்டினார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!