Tamilnadu
பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய காவலர்கள்: வியந்து பார்த்த வெளிநாட்டுப் பயணிகள்!
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று மாலை 6 மணி முதலே காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் காஞ்சிபுரம் பேருந்து நிலைய சிக்னல் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சரியாக 12 மணிக்குப் புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருடன் கேக் வெட்டி காவல்துறையினர் கொண்டாடினர். பிறகு பொதுமக்களுக்கு கேக் வழங்கி காவல் கண்காணிப்பாளர் சுதாகர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பொதுமக்களுடன் இணைந்து போலிஸார் புத்தாண்டு கொண்டாடியதைப் பார்த்த பெல்ஜியம் நாட்டை சார்ந்த பெண்மணி வியந்துபார்த்து, "இது போன்று நிகழ்வு நான் பார்த்ததில்லை. இது புதிதாக இருக்கிறது நன்றாகவும் இருக்கிறது" என போலிஸாரை பாராட்டினார்.
Also Read
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!