Tamilnadu
அதிகாலையில் பற்றி எரிந்த 2 கார்.. பதறியடித்து ஓடிய குடியிருப்பு வாசிகள்: நடந்தது என்ன?
சென்னையை அடுத்த பழவந்தாங்கல் தணிகை வேம்படி சக்தி விநாயகர் கோயில் தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களைச் சாலையோரம் நிறுத்துவது வழக்கம்.
இதன்படி நேற்று சாலையோரம் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அதிகாலை திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், கிண்டி மற்றும் திருவான்மியூர் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் காரில் எரிந்திருந்த தீயை சிறிது நேரத்திலேயே அணைத்தனர். இதனால் பெரிய விபத்து எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் எரிந்த காரில் ஒன்று அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமானது என்றும் மற்றொரு கார் உள்ளகரத்தை சேர்ந்த காந்திமதி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த ஓட்டுநர் கோபி என்பவர் ஓட்டிவந்து பழவந்தாங்கலில் நிறுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து காருக்கு மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!