Tamilnadu
“ஆளுநரிடம் 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளது; தெளிவாக விளக்கினோம்” : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!
ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, உள்துறை மற்றும் சட்டத்துறை செயளர்களோடு ஆளுநரை சந்தித்ததாகும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் .
21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஆளுநர் கேட்ட விளக்கங்களை தெளிவாக நேரில் விளக்கினோம். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், சில சந்தேகங்கள் உள்ளது அதை பரிசீலித்த பிறகு ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இருக்க கூடிய தடை சட்டங்கள் வாயிலாக ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால் உடனடியாக அது நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவித்தார்
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!