Tamilnadu
“ஆளுநரிடம் 21 மசோதாக்கள் கிடப்பில் உள்ளது; தெளிவாக விளக்கினோம்” : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்!
ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, உள்துறை மற்றும் சட்டத்துறை செயளர்களோடு ஆளுநரை சந்தித்ததாகும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார் .
21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது என்றும், ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியாது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் ஆளுநர் கேட்ட விளக்கங்களை தெளிவாக நேரில் விளக்கினோம். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும், சில சந்தேகங்கள் உள்ளது அதை பரிசீலித்த பிறகு ஒப்புதல் தருவதாக ஆளுநர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இருக்க கூடிய தடை சட்டங்கள் வாயிலாக ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தி கொண்டு தான் இருக்கிறோம். ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால் உடனடியாக அது நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவித்தார்
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!