Tamilnadu
மடிக்கணினி வழங்குமாறு கோரிக்கை விடுத்த திருநங்கை .. கூட்டம் முடியும்முன் கோரிக்கையை நிறைவேற்றிய கலெக்டர்!
நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு என்பவர் செயல்பட்டு வருகிறார். இவரின் முயற்சியால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திருநங்கைகளின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த மாதத்துக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் முன்வைத்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சௌபர்ணிகா என்பவர் ஆட்சியர் முன் தனது கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கூறினார்.
அவர் கூறுகையில், தான் பழைய பேட்டை பகுதியில் உள்ள ராணி அண்ணா கல்லுரியில் படித்து வருவதாகவும், தனது வள்ளியூரில் இருந்து தினமும் பழைய பேட்டை பகுதியில் உள்ள கல்லூரிக்கு வந்து செல்வதற்கான இலவச பேருந்து பயண அட்டை, திருநங்கைகளுக்கான கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பெண்கள் கல்லூரியில் படித்து வரும் நிலையிலும் ஆண் பெயராக இருக்கும் தனது பெயரை மாற்றிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தனக்கு கல்லூரி படிப்புக்கு தேவையான மடிகணினி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு பெறக்கூடிய நிலையில் மாவட்ட ஆட்சியர் திருநங்கை சௌபரணிகாவை அழைத்து அனைவர் முன்னிலையிலும் அவருக்கு மடிக்கணினி வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். அவரின் இந்த செயல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!