Tamilnadu
தி.மு.க மாணவரணி புதிய நிர்வாகிகள் நியமனம்.. தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
தி.மு.க மாணவரணி தலைவராக இரா.ராஜீவ் காந்தி, செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் - செயலாளர் – இணைச் செயலாளர்கள் - துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.
மாணவர் அணித் தலைவர் - இரா. ராஜீவ் காந்தி
மாணவர் அணிச் செயலாளர் - சி.வி.எம்.பி.எழிலரசன்,பி.ஈ.,பி.எல்.,எம்.எல்.ஏ.,
மாணவர் அணி இணைச் செயலாளர்கள் -
பூவை சி. ஜெரால்டு, எம்.ஏ., எம்.எல்.,
எஸ். மோகன், பி.ஏ.
மாணவர் அணி துணைச் செயலாளர்கள் -
மன்னை த. சோழராஜன் பி.ஈ.,
ரா. தமிழரசன்பி.ஏ., பி.எல்.,
அதலை பி.செந்தில்குமார், எம்.ஏ.,
கா. அமுதரசன்,
பி.எம். ஆனந்த்,
கா.பொன்ராஜ்,
வி.ஜி. கோகுல்,
திருமதி பூர்ண சங்கீதா,
திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் நியமனம்.
இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தி.மு.க இளைஞரணி மற்றும் மகளிரணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க மாணவரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!