Tamilnadu

தி.மு.க மாணவரணி புதிய நிர்வாகிகள் நியமனம்.. தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தி.மு.க மாணவரணி தலைவராக இரா.ராஜீவ் காந்தி, செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தி.மு.க. சட்ட திட்டம் விதி 18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் - செயலாளர் – இணைச் செயலாளர்கள் - துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

மாணவர் அணித் தலைவர் - இரா. ராஜீவ் காந்தி

மாணவர் அணிச் செயலாளர் - சி.வி.எம்.பி.எழிலரசன்,பி.ஈ.,பி.எல்.,எம்.எல்.ஏ.,

மாணவர் அணி இணைச் செயலாளர்கள் -

பூவை சி. ஜெரால்டு, எம்.ஏ., எம்.எல்.,

எஸ். மோகன், பி.ஏ.

மாணவர் அணி துணைச் செயலாளர்கள் -

மன்னை த. சோழராஜன் பி.ஈ.,

ரா. தமிழரசன்பி.ஏ., பி.எல்.,

அதலை பி.செந்தில்குமார், எம்.ஏ.,

கா. அமுதரசன்,

பி.எம். ஆனந்த்,

கா.பொன்ராஜ்,

வி.ஜி. கோகுல்,

திருமதி பூர்ண சங்கீதா,

திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் நியமனம்.

இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க இளைஞரணி மற்றும் மகளிரணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தி.மு.க மாணவரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: “தி.மு.க இளைஞரணி, மகளிரணியில் புதிய நியமனங்கள்” : தலைமை கழகத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!