Tamilnadu
“கார்டு மேல இருக்க அந்த 16 நம்பர் சொல்லுங்கோ..” : ATM Card நம்பரை கேட்ட மோசடி நபரை வறுத்தெடுத்த முதியவர்!
வெளியுலகம் தெரியாமலும், கல்வி அறிவு இல்லாமலும், சமூக வலைத்தளங்களில் அனுபவம் இல்லாமலும் இருக்கும் நபர்களை குறிவைத்து பண மோசடி கும்பல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோசடி செய்து வருகிறது.
தமிழக அரசின் சார்பில் காவல்துறையினர் மூலம் சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரிடம் அவரது மனைவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஏ.டி.எம் கார்டு விபரங்களை மோசடி கும்பல் கேட்டு உள்ளது.
எந்த ஒரு வங்கியிலும் ஏ.டி.எம் கார்டு இல்லாத தனது மனைவிக்கு தொடர்பு கொண்ட மோசடி நபரிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏ.டி.எம் கார்டில் உள்ள 16 நம்பரை கேட்டு பேசும் அவரை குழப்பி வருத்தெடுத்த சம்பவம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹலிபுல்லா ஆன்லைன் வாயிலாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!