Tamilnadu
8 சவரன் நகைக்காக நண்பனிடமே கைவரிசை காட்டிய சக நண்பர்கள்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
மதுரை கான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. சட்ட கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர் இஸ்மாயில் என்பவருடன் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களைத் தடுத்து நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. பிறகு பாலாஜி அணிந்திருந்த 8 சவரன் தங்கை செயினை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இது சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது இஸ்மாயிலுடன் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் இஸ்மாயிலிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இஸ்மாயில் தனது நண்பர்கள் சுந்தர வர்மா, ஆதிஸ்வரன், தினேஷ், மபுந்தள் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பாலாஜியிடம் இருந்து நகையைப் பறிக்க திட்டம் போட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின்படி பாலாஜியிடம் நகை பறித்து இஸ்மாயில் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் 5 பேரையும் கைது செய்து 8 சவரன் நகையை மீட்டு பாலாஜியிடம் ஒப்படைத்தனர். நண்பனிடமே சக நண்பர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!