Tamilnadu
8 சவரன் நகைக்காக நண்பனிடமே கைவரிசை காட்டிய சக நண்பர்கள்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
மதுரை கான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. சட்ட கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர் இஸ்மாயில் என்பவருடன் வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களைத் தடுத்து நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. பிறகு பாலாஜி அணிந்திருந்த 8 சவரன் தங்கை செயினை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இது சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது இஸ்மாயிலுடன் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் இஸ்மாயிலிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இஸ்மாயில் தனது நண்பர்கள் சுந்தர வர்மா, ஆதிஸ்வரன், தினேஷ், மபுந்தள் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பாலாஜியிடம் இருந்து நகையைப் பறிக்க திட்டம் போட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின்படி பாலாஜியிடம் நகை பறித்து இஸ்மாயில் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் 5 பேரையும் கைது செய்து 8 சவரன் நகையை மீட்டு பாலாஜியிடம் ஒப்படைத்தனர். நண்பனிடமே சக நண்பர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!