Tamilnadu
பயணி தவறவிட்ட தங்க Bracelet.. போலிஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறியவரைச் சோழபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார்.
அப்போது, தங்கநகை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனே சோழபுரம் காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த நகையை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலிஸார் அவரது ஓட்டோவில் பயணம் செய்த விவரங்களைக் கண்டுபிடித்தனர்.
பிறகு நகையை தவற விட்ட நபரை போலிஸார் கண்டுபிடித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு காவல் நிலையம் வந்த அவரிடம் அடையாளங்கள் சரியாகக் கூறியதை அடுத்து போலிஸார் ஒப்படைத்தனர். ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்கை நகையை பத்திரமாக போலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் கிருஷ்ணனை பலரும் பாராட்டிவருகின்றனர்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!