Tamilnadu
பயணி தவறவிட்ட தங்க Bracelet.. போலிஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறியவரைச் சோழபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார்.
அப்போது, தங்கநகை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனே சோழபுரம் காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த நகையை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலிஸார் அவரது ஓட்டோவில் பயணம் செய்த விவரங்களைக் கண்டுபிடித்தனர்.
பிறகு நகையை தவற விட்ட நபரை போலிஸார் கண்டுபிடித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு காவல் நிலையம் வந்த அவரிடம் அடையாளங்கள் சரியாகக் கூறியதை அடுத்து போலிஸார் ஒப்படைத்தனர். ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்கை நகையை பத்திரமாக போலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் கிருஷ்ணனை பலரும் பாராட்டிவருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!