Tamilnadu
பயணி தவறவிட்ட தங்க Bracelet.. போலிஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குக் குவியும் பாராட்டு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இவரது ஆட்டோவில் ஏறியவரைச் சோழபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார். இதையடுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் பயணிகள் அமரும் சீட் பகுதியை துடைத்துள்ளார்.
அப்போது, தங்கநகை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் உடனே சோழபுரம் காவல்நிலையம் சென்று நடந்தவற்றைக் கூறி அந்த நகையை போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் போலிஸார் அவரது ஓட்டோவில் பயணம் செய்த விவரங்களைக் கண்டுபிடித்தனர்.
பிறகு நகையை தவற விட்ட நபரை போலிஸார் கண்டுபிடித்து அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு காவல் நிலையம் வந்த அவரிடம் அடையாளங்கள் சரியாகக் கூறியதை அடுத்து போலிஸார் ஒப்படைத்தனர். ஆட்டோவில் பயணி தவறவிட்ட தங்கை நகையை பத்திரமாக போலிஸாரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் கிருஷ்ணனை பலரும் பாராட்டிவருகின்றனர்.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!