Tamilnadu
பட்டாசை பாதுகாத்துக்குங்க.. தீபஒளி திருநாளன்று வெளுத்து வாங்கப்போகும் மழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தீபஒளி திருநாள் பண்டிகை வரும் 24ம் தேதி நாடுழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காகப் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து புத்தாடைகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி தீபஒளி திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 24ம் தேதி வாக்கில் புயலாக மாறும் என்பதால் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் இன்று நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அக்டோபர் 23ஆம் தேதிவாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
பிறகு வடதிசையில் நகர்ந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். பிறகு 25ஆம் தேதிவாக்கில் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று முதல் 25ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 24ம் தேதி தீபஒளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கனை சோகமடைய செய்துள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”